கிழக்கு மாகாண அபிவிருத்தி பணிகளை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச்  சந்தித்து கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஷ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (ஐஆகு வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), {ஹய் மியாவ் (சிரே்ஷ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.