கட்டுநாயக்கசென்ற ரயிலால் கார் மோதி நால்வர் காயம்!

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில்  குடஹகபொல உப ரயில்வே கடவையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கார் ஒன்னற மோதியதில் நால்வர் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் நால்வரும் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.