இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வடக்கு ஆளுநருக்கும் இடையே விசேட சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சனிக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது ஆளுநரால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதையடுத்து, இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி புரியும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வட மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.