ஊடக சுதந்திரம் பேணப்படவேண்டும் அமைச்சர் வியாழேந்திரன் கோரிக்கை!

கருத்துச் சுதந்திரம் எனப்பது இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது. எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு  மண்டூர் பகுதியில் 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில், 1.1 கிலோ மீற்றர் வீதி கார்பட் இடும் வேலைத்திட்டம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கலந்துகொண்டு குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்பேது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் சில விசேட கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. அந்தக் கலந்துரையாடல்களின்போது கொண்டுவரப்படவுள்ள சட்டங்கள் சமூகத்திற்கு சாதகமானவையாகவா, அல்லது பாதகமானவையாகவா இருக்கின்றன என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் நாம் அதுதொடர்பிலான முடிவுகளை எடுப்போம்.

கருத்துச் சுதந்திரம் எனப்படுவது இந்தநாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம் பேணப்படல் வேண்டும். ஊடக அடக்குமுறை என்பது இருக்கக் கூடாது.

எல்லோருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்க வேண்டும். அந்த கருத்துச் சுதந்திரம் நசிக்கப்படக் கூடாது. அது மிக முக்கியமானது.

ஏனெனில் ஒரு நாட்டினுடைய ஜனநாயகத்தினுடைய முதுகெலும்பு ஊடகமாகும், கருத்துச் சுதந்திரமுமாகும். எனவே அனைவருக்கும் இந்த நாட்டில் தமது கருத்துக்களை சுதந்திரமான வெளியிடும் நிழலைமை இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள், அமைச்சரின் இணைப்பாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.