அரச அதிகாரிகளின் தவறுகளால் முதலீட்டாளர்கள் இலங்கைக்குத் திரும்பவும் வராமல் போகலாமாம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகின்றார்

அருவக்காலு குப்பைத் திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

அருவாக்காலு குப்பைத் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரச அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தாமதங்கள் மற்றும் தவறுகளால் முதலீட்டாளர்கள் இலங்கைக்குத் திரும்ப வராமல் போகலாம் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சீன நிறுவனமான சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி மற்றும் சீனாவின் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து அருவாக்காலு குப்பை கிடங்கின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அந்த நாடுகளுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் அது பாதிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் நிலையான செயற்பாட்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 5,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரச நிதியைப் பயன்படுத்தாமல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நிதி ரீதியாக இலாபகரமான மற்றும் நிலையான வகையில் அதனை நடத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வர்த்தக மாதிரியின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு ஈவுத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை செயற்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்தன. இப்பிரச்னைக்கு தீர்வுகாண நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் முன்வைக்கும் பல்வேறு செலவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா இங்கு கூறினார்.

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் சவுத்வெஸ்ட் முனிசிபல் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஒப் சைனா ஆகிய நிறுவனங்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து, இந்தத் திட்டத்தை அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின்  பணிகள் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை 03 மாதங்கள் வேலைத்தளத்தில் தங்கியிருக்கும் செயற்திட்ட இயக்குநர்களுக்கு  பயிற்சியளிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொழும்பு நகரின் திண்மக் கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  புத்தளம், அருவாக்காலு பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல்லில் இருந்து இடித்து அகற்றப்பட்ட கைவிடப்பட்ட குழிகள் தொடர்பாக சுகாதார கழிவுகளை அகற்றும் வசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு உள்ளிட்ட பிற வசதிகளை நிர்மாணிக்கும் பொறுப்பு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் புத்தளத்தில் 02 கழிவுப் பரிமாற்ற நிலையங்களை நிர்மாணிப்பதும் அது தொடர்பான ரயில் உட்கட்டமைப்பு மற்றும் வீதி அமைப்பும் இதன் கீழ் இடம்பெறுகிறது.

கொழும்பைச் சுற்றி உருவாகும் 1,200 மெற்றிக் தொன் குப்பைகளை களனி கழிவுப் பரிமாற்ற நிலையத்திற்குக் கொண்டுவந்து, அதனை அமுக்கி கொள்கலன் பெட்டிகளில் அடைத்து, அருவாக்கலுவில் சுகாதாரமான முறையில் அகற்றுவதற்காக ரயிலில் கொண்டு செல்ல இந்தத் திட்டம் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது மேல்மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களால் அகற்றப்படும் எஞ்சிய கழிவுகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் அகற்றப்படும் வகையில் இந்த வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன.

திட்டத்தின் மொத்த செலவு 130 மில்லியன் அமெரிக்க டொலர்கள். களனி இடமாற்ற நிலையத்திலிருந்து அருவக்காலு குப்பைக் கிடங்குக்கு புகையிரதத்தில் குப்பைகளை கொண்டு செல்வதற்காக 4 இன்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கும் வரை பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த புகையிரதத் திணைக்களத்துக்கு இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. குப்பை போக்குவரத்துக்கு தேவையான 94 கொள்கலன் பெட்டிகளும் வாங்கப்பட்டுள்ளன. இலங்கை புகையிரத திணைக்களம் களனியிலிருந்து அருவக்காலுக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு தேவையான 17 புகையிரதங்களை  வழங்குவதற்கு 549.06 மில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது. அந்த தொகையை வழங்க அமைச்சரவையின் அனுமதி பெறப்பட உள்ளது.

பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. களனி பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து புகையிரதத்தில் அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு  சேமிக்கப்படும்.

அருவக்காலு பகுதியில் 265 ஏக்கர் பரப்பளவில் இந்த குப்பை கொட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பல ஏக்கர் பூங்காவாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அழகுபடுத்தப்பட்டிருப்பதும் சிறப்பு.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பேராசிரியர் சி. வெடிக்கார மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.