தம்பாளை விபத்தில் 17 வயது சிறுவன் பலி

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று தம்பாளையில்  இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தம்பாளை – றிபாய் புர உள்ளக காபர்ட் வீதியில் சனிக்கிழமை இடம்பெற்றது.

குறித்த வீதியால் சிறுவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  புலஸ்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.