சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டவர்களை மீட்க ஏற்பாடு!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களைப் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதற்காக கென்யாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கணனாதன் சோமாலிய கடற்படைத் தலைவருடன் பேச்சுக்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து கென்யாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கணனாதன் தெரிவிக்கையில் –

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்களை பெற்று அவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக எத்தியோப்பியாவிலுள்ள எனது சகாவுடன் இணைந்து சோமாலிய கடற்படைத் தளபதி அட்மிரல் அப்திவர்சமே ஒஸ்மானுடன் பேச்சுக்களை முன்னெடுத்து நெருக்கமான ஒத்துழைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றேன்.

சோமாலிய கடற்படைத் தலைவர் அவர்களது தொடர்பு அதிகாரி மூலம்  ஐரோப்பிய ஒன்றிய கடற்படை கூட்டு நடவடிக்கை மையத்திற்கு  நிலைமையை நிவர்த்தி செய்வதற்கும் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து அறிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சோமாலிய அதிகாரிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சிகள் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை இவை நிரூபிக்கின்றன.

இலங்கை மற்றும் சோமாலிய அரசுகள் இந்த விவகாரத்தை விரைவாகத் தீர்ப்பதற்கும் கடத்தப்பட்ட இலங்கையர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கென்யாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கணனாதன் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.