சமூக விரோதச் செயல்கள் பொறுப்பிலிருந்து அரசியல்வாதிகளை தப்பிக்கவிட முடியாதாம்! வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கூறுகிறார்

பாதாள உலகம் உட்பட பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் பலர் அரசியல்வாதிகளின் சகவாசத்தில் இருப்பதால் அவர்களின் சமூக விரோதச் செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகளை விடுவிக்க முடியாது என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்  தெரிவித்துள்ளார்.

கண்டி, பொல்கொல்ல பிரதேசத்திலுள்ள அறநெறி  பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மகாநாயக்க தேரர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாட்டை போதைப்பொருளில் இருந்து விடுவிப்பதற்காக  பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர் எனவும், அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைவரினதும் ஆதரவும்  அவர்களுக்குத்  தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் சமயக் கல்வி கற்காதவர்களும், துறவிகளின் சகவாசம்  பெறாதவர்கள் என்றும் இன்று வாரத்திற்கு  இருமுறைகளை மாத்திரமே   பாடசாலைகளில் பௌத்தம் கற்பிக்கப்படுவதாகவும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை  அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும்  மகாநாயக்க  தேரர் மேலும்  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.