இரண்டு பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது

 

மண்முனை மேற்கு வவுணதீவு மற்றும் மண்முனைப்பற்று ஆரையம்பதி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விரு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாக இந்தக் கூட்டங்கள் அமையபெற்றுள்ளன.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதிசத்தியானந்தியின் ஏற்பாட்டிலும், மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் திருமதி தெட்ஷணகௌரி ஏற்பாட்டிலும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையிலும் இந்தக் கூட்டங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக இப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பபிலும், இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. விசேடமாக காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மேலும் இப்பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பிலும் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும் மக்கள் நலன்சார் திட்டங்கள் பலவற்றிற்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் அனுமதியளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவரின் தனிப்பட்ட செயலாளர் தம்பிராஜா தஜிவரன் போன்றோர் உட்பட துறைசார் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.