ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவும் சாதனையாளர் கௌரவிப்பும்

(உமர் அறபாத் -ஏறாவூர் )

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தின் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 10 ஆண்டு நிறைவை முன்னிட்டும் 2023 ஆம் ஆண்டு மெய்வல்லுநர் போட்டியில் வெற்றிகளை பெற்ற மாணவர்களையும்
2023 ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் பிரதேச கலாசார போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த புதன்;கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் ஜலால்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலை ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் பசீர் சேகுதாவூத் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பனிமனையின் பணிப்பாளர் அமீர் கலந்து சிறப்பித்தார்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மற்றும் மாணவர்களின் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களும் இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.