நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம் தொனிப்பொருளில் திருமலையில் நிகழ்வு

 

எப்.முபாhரக்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘நமது தேசிய வீரர்களுடன் ஒரு தருணம்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

1948 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக இருந்த தேசிய வீரர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெற்றதுடன், தனிநபர்களாக நாம் வெற்றியடைய வேண்டிய பண்புகள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபரால் எடுத்துரைக்கப்பட்டது.

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பிக்கும் முகமாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.