பால்நிலை குறித்த கலந்துரையாடல்!

கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை தொடர்பாகத் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் என்பவை தொடர்பாகக் கலந்துரையால் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சிமாவட்டத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் 2022 வருடத்தைவிடவும் 2023 ஆண்டில் பெண்களுக்கு எதிரான சிறு குற்றம்
2022 – 89, 2023 – 166 குற்றங்களும் பதிவாகின

குடும்ப பிரச்சினை தொடர்பான முறைபாடுகள் 2022 – 1175,
2023 – 863பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து, கானப்படுவதாகவும் மற்றும் குடும்பவன்முறைகள் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாகப் பாதிக்கபடுகின்றனர் எனவும் இதற்கான மாற்றுநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் மற்றும் போசாகற்ற நலிவடைந்த சிறுவர்கள் அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளைவிட போசாக்கான உணவுகளை வழங்கநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் சிறுவர்கள் தொடர்பாக ஏற்படும் பொலிஸாருக்கு வழங்கவேண்டிய தகவல்கள் தொடர்பாக புதிய தொலைபேசி 109 இலக்கம் என்று தெரியப்படுத்தப்பட்டதுடன், சிறுவர்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துலையாடல் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.