வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முன்னெடுக்க கலந்தாய்வு!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

அம்பாறை மாவட்டத்தில் அன்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 1262 குடும்பங்களுக்குமான உலக உணவு திட்டத்தின் உலர் உணவு பொதிகளை வழங்குவது தொடர்பிலான ஆரம்பக் கட்ட கலந்துரையாடல் பிரதேச செயலாளர்  முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுப்பது தொடர்பில் உலக உணவு திட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கங்களை வழங்கி வைத்தார்கள்.

இதில் உதவி பிரதேச செயலாளர் அஸ்லம், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் தாசிம், தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.