அஷ்ஹேரியன சமூக சேவை அமைப்பின் சுதந்திர தின நிகழ்வும் மர நடுகையும்!

 

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்
76 ஆவது சுதந்திர தின விழா சம்மாந்துறை அஷ்ஹேரியன் அமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் விமரிசையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் வருகை தந்த அதீதிகளால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் , ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்த, முன்னாள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய பிரதி தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதீதி உரை ஆற்றியதோடு, கௌரவ அதீதி உரையினை கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஐ. ரனூஸ் நிகழ்த்தியதுடன், தொடர்ந்தும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் அதீதி உரையையும் நிகழ்த்தினார்.

மேலும் நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.நௌபரும், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சரீபாவும், தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் தலைவர் அஷ்-ஷேய்க் இஸ்மாலெப்பையும், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய ஆசிரியர் ஹாதிக் இப்ராஹிமும், அமைப்பின் ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.