ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கு விஜயம்!

நூருல் ஹூதா உமர்

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை சூழவுள்ள மாணவர்களும் தங்களது அறிவுவிருத்திக்கு பயன்படுத்த அனுமதிக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிந்தனையின் கீழ் ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் வியாழக்கிழமை கலை கலாசார பீடம், தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டதுடன் கலை கலாசார பீடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்விலும் கலந்துகொண்டனர்.

கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அறிவுசார் செயலமர்வில் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் பிரதான பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி யூ.எல். அப்துல் மஜீட், கலை கலாசார பீட சமூகவியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.ஐயூப் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.றிஸ்வான் ஆகியோரும் மாணவர்களின் உளவள விருத்தியோடு சம்பந்தப்பட்ட உரைகளை ஆற்றினர்.

அல்- ஹம்றா வித்தியாலய அதிபர் அஷ்செய்க் யூ.கே. அப்துர் றகீம், வலய தலைவர் ஏ.சி. இஸ்மாயில், பிரதி அதிபர் அஹமட் ஜுமான், பிரதி அதிபர் ஜெ. வஹாப்டீன், பிரதி அதிபர் எம்.ஏ. கமறுன் நிஷா, வலய பிரதி தலைவர் எம்.ஏ. அஹமட் பாரிஸ், ஆசிரியர்களான எம்.ஏ.சி.எம். இஹ்சாஸ், எம்.ஐ. முஸ்பிறா, எம்.எஸ்.எம். சத்தார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைப்பிரிவு மேற்பார்வையாளர் எஸ்.எம்.வி.எம். அலி அக்ரம் அவர்களும் இவர்களுடன் இணைந்திருந்தனர்.