அட்டாளைச்சேனை நலன்புரியால் கல்வியியலாளர்கள் கௌரவிப்பு!

கே.ஏ.ஹமிட்

அட்டாளைச்சேனையில் புதிதாக அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டவர்கள், அதிபர் சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெறவுள்ளவர்கள் என கல்வியியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த இந்த விருது வழங்கும் நிகழ்வு லொய்ட்ஸ் மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் புதிதாக அதிபர்களாக உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளவர்கள், கடந்த காலங்களில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, அதிபர் சேவையில் இருந்து கிட்டிய காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள அதிபர்கள் கௌரவிக்கும் நிகழ்வை அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஜே.எம்.அன்வர் நௌஷாத் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கல்வி விருது வழங்கும் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோருடன் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை ஆகியோருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ கே அமீர், முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. கபூர், ஸ்ரீ.ல.மு.கா.கட்சியின்  உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.