வெள்ளம் பாதிக்கப்பட்ட குறிஞ்சாக்கேணி பிரதேச மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவைத்தார் திருமலை எம்.பி. தௌபீக்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

குறிஞ்சாக்கேணி மாகாத் நகர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் கோரிக்கைக்கமைவாகக் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுடைய பரித்துரையின்கீழ் எல்.ஐ.ஓ.சி. நிறுனத்தின் அனுசரணையில் நிவாரண உதவிகள் தௌபீக் எம்.பி யால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் எல்.ஐ.ஓ.சி.நினுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ்,  முன்னாள் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர்களான ஜவாதுல்லா, சனூஸ் மற்றும் எல்.ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.