இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்! கிளிநொச்சி பாடசாலைக்கு

நூருல் ஹூதா உமர்

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் ஜெயலட்சுமி மாணிக்கவாசகம் தலைமையில் பாடசாலையின் மண்டபத்தில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான எல். கஜரூபன், எம். காந்தன், ஆர். ஜெகனாதன், ஆஸ்திரேலியாவில் இருந்து வருகைதந்த தி. ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்குத் தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

இப்பாடசாலை தேசிய சுற்றாடலுக்கான ‘சுவசர தக்சலாவ’ ஜனாதிபதி விருதை தொடர்ச்சியாக 2015, 2016, 2017 என மூன்று முறை பெற்றுள்ளதுடன் பொலித்தீன் அற்ற பாடசாலையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது