விளக்கமறியல் கைதியை பார்வையிடச் சென்ற நபரின் சொக்லெட் பொதிக்குள் புகையிலை துண்டுகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காகச் சென்ற ஒருவர், தான் கொண்டு வந்த  சொக்லெட் பிஸ்கட் பொதிக்குள் மிகச் சூட்சுமமான முறையில் புகையிலை துண்டுகளை மறைத்து  வைத்திருந்த நிலையில்  கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் (ஊடகப் பேச்சாளர்) காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  சோதனையிட்டபோதே இவை கண்டு பிடிக்கப்பட்டு சந்தேக நபரை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.