செல்வநகர் திஃமூ.அந்நூர் வித்தியாலய புதிய மாணவர்களை இணையும் விழா!

(மூதூர் நிருபர்)

மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட திஃ மூஃ செல்வ நகர், அந்நூர் வித்தியாலயத்தில் பாடசாலைக்கல்விக்கு மகிழ்ச்சிகரமான ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் தரம் 1 இல் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளுவதற்கான வரவேற்கும் வைபவம்
பாடசாலை அதிபர் கே.எம்.எம்.றிஸ்மி தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது.

இதில் கௌரவ அதிதியாக மூதூர் வலயக்கல்வி அலுவலகம் சார்பில் ஈபிஎஸ்ஐ இணைப்பாளர் எஸ்.எம்.நௌபர் கலந்துகொண்டார். மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உலமாக்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.