சம்மாந்துறையில் பல்லின மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையில் ஏடு தொடங்கி வைத்தார் எம்.சபீஸ்!

நூருல் ஹூதா உமர்

சம்மாந்துறை கல்வி வலய கமுஃசதுஃ தாஹிரா வித்தியாலயத்தில் புதிய வருடத்துக்கான ஏடு தொடங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) அப் பாடசாலையின் அதிபர் எம்.ஏ. ஆர்.எம். முஸ்தபா தலைமையில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஏடு தொடங்கி வைத்தார்.

இப்பாடசாலையில் பல்லின மாணவர்கள் கல்வி பயில்வதோடு அங்குள்ள மாணவர்கள் தமிழ் சிங்கள மொழிகளில் கல்வி கற்பது மாத்திரமல்லாமல் சரளமாக இருமொழிகளிலும் பேசக்கூடியவர்களாக காணப்படுவது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள், சம்மாந்துறை சூரா சபை மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.