கம்பஹா மாவட்டத்தில் பேரெழுச்சிபெற்ற தேசிய மக்கள் சக்தி பெண்கள் மகாநாடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கையின் பல அரசியல் தலைமைகளின் கேந்திரமான கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக தலைமையில் பெண்கள் மகாநாடு இடம்பெற்றது.

இம் மகாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சர்வசமய பெரியார்கள் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த மூவின பெண்களும் கலந்து கொண்டனர்.