அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் அவசர நிலை பிரகடனம்!
அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவி வருவதான் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், கடும் குளிர் காரணமாக அமெரிக்காவின் மேற்கு பகுதி நகரங்கள் முடங்க தொடங்கியுள்ளதாகவும், தற்போது வரையில் குளிர் காரணமாக ஆறு பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போது வரையிலும் சுமார் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை