ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் நேற்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தினால் இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஆறுவருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்களேதுமில்லை