கொரோனா தொற்றிலிருந்து மேலும் 12 பேர் மீண்டனர்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1979 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 2 கடற்படையினரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில், 894 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 94 ஆகப் பதிவாகியுள்ளதுடன் இன்னும் 104 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்ளில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.