பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

விசேட அதிரடிப்படை, பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் இன்று நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது கொலை செய்யப்பட்டமை தொடர்பாக பிள்ளையானுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்த ராஜா, கஜன் மாமா என அழைக்கப்படும் கனநாயகம, முன்னாள் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாய் வினோத் என அழைக்கப்படும் மதுசிங்க ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.