தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு…

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 1,020 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 4 ஆயிரத்து 380 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், கடந்த  26ஆம் திகதி மாலை 4 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி மாலை 4 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மட்டும் 164 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 09 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 155 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதேவேளை, வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.