தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்…

கம்பவாரிதி ஜெயராஜ் மீண்டும் எழுதியுள்ளார்!
உலகத்தின் பார்வை மீண்டும் இலங்கைமீது பதிந்திருக்கிறது.
காரணம், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல்.
இத் தேர்தல் இம்முறை தமிழர்தம் அரசியல் பாதையைப் புரட்டிப்போடும் போல் தெரிகிறது.
அதனால் தமிழர் பிரதேசத்திலும் தேர்தற் களம் பரபரப்பாகியிருக்கிறது.
அவருக்கா? இவருக்கா? எனக் கேள்விகளும்,
அவருக்கே! இவருக்கே! என்ற பதில்களுமாக,
ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்,
அறிக்கைப் போர் பரபரப்பாய் நடந்துகொண்டிருக்கிறது.
தேர்தல் காலங்களில் இவ்வாறு நடப்பது இயல்புதான்.
ஆனால், வெளிவரும் அறிக்கைகளில் பல,
இனநன்மை நோக்கியதாய் இல்லாமல் சார்புபட்டவையாக இருப்பதுதான்,
மனக்கவலை தரும் விடயமாக இருக்கிறது.
இங்ஙனமாய் சார்பு அரசியல் பேசுவோரும்,
தாம் இனநலம் நோக்கியே பேசுவதாகச் சொல்லிக்கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.