பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும்…

(க.கிஷாந்தன்)

பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் நுவரெலியாவில் வைத்து இன்று (04.08.2020) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பானவர்கள் ஊடாக இன்று காலை வாக்கு சீட்டுகளும், வாக்குபெட்டிகளும் பாதுகாப்பான முறையில் அனுப்பவைக்கப்பட்டன.

அதேபோல் 95 வாக்கெண்ணும் நிலையங்களும் உள்ளன.  6 ஆம் திகதி காலை முதல்  நான்கு தொகுதிகளிலும் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.

வாக்களிப்பு பணிகளுக்காக 4 ஆயிரம் அரச அதிகாரிகளும், வாக்கெண்ணும் பணிகளுக்காக 2 ஆயிரம் அரச அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 1500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் விதி முறைமீறல்கள் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. சிறு அளவிலான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றவையே அவையாகும். பாரியளவில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை.

அதேவேளை நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி பகல் 1 மணிக்கும், விருப்பு வாக்கு விபரத்தை இரவு எழு மணியளவிலும் வெளியிடக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.