வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக  மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கேரளா,  கர்நாடகாவில் மிக கனமழையும்,  ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதுடன்,  கோவா மற்றுமு் மத்திய பிரதேசத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்  அந்தமான், நிகோபார் உள்ளிட்டபகுதிகளுக்கு 4 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.