பிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

“நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“எமது அரசியல் பயணத்தில் எமது மக்களுக்காக இந்த நாட்டில் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக நாங்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். எனினும், கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற குழப்பம் காரணமாக தீர்வை எம்மால் அடைய முடியாமல் போனது.

நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் எவ்விதமான நன்மையும் நாம் அடையப்போவதில்லை. எமது இலக்கு ஒன்று. அந்த இலக்கு என்னவென்றால் தமிழ்த் தேசிய இனம் – தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த இடங்களில் உறுதியான அரசியல் தீர்வைப் பெற்று நிம்மதியாக வாழவேண்டும். இதைப் பெறுவதற்காக நாம் அனைவரும் ஒன்றுமையாகச் செயற்பட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.