பாரிய மரம் முறிந்து விழுந்து இளைஞர்கள் இருவர் மரணம் – முல்லைத்தீவில் நேற்று மாலை சோகம் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தமையால் அதில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் (வயது 33), நீராவிப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த அரியராசா எட்வேட் (வயது 33) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அரியராசா எட்வேட் படுகாயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று பெய்த மழைப் பொழிவின்போது கடும் காற்றும் வீசியுள்ளது. இந்நிலையில் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் அடியோடு சாய்ந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே இந்த அனர்த்தத்தில் அகப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வீதியில் ஏற்பட்ட தடையை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.
……………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.