தமிழ்த் தேசிய கட்சிகள் ஓரணியில் திரள்வது தென்னிலங்கை இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது – ரெலோவின் மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்.

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தொரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பாராளுமன்றிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நவலர் மண்டபத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வரவேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும், மக்களின் சேவையில் இருக்கும் ஓர் விடுதலைப்போராட்ட இயக்கமாக ஜனநாயக அரசியலை மேற்கொள்ளும் நாம் ஆடம்பரங்கள் அற்ற வகையில் எமது கட்சித்தலைமைகளுக்கான வரவேற்பினை யாழில் மேற்கொள்கின்றோம். எமது மக்களும் நாமும் அரசியல் ரீதியில் விடுதலை அடைய போராடிக்கொண்டிருக்கின்றோம்.
அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இராணுவமயமாக்கம் என மனித உரிமைகள் ரீதியில் நாம் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்து வருகினறோம்;. அவ்வாறான ஓர் சூழ்நிலையில் இன்றைய நிகழ்வு என்பது மகிழ்வதற்கானதல்ல. மாறாக நாங்கள் கூட்டாக விடுதலைக்கான அரசியலை முன்கொண்டு செல்வதற்கான உத்திகளைக்கொண்டது.
தென்னிலங்கையில், ஜனநாயகத்திற்குள் புதைந்திருக்கக் கூடிய இனவாத கட்டமைப்பு கோட்டபாய அரசாங்கம் பாராளுமன்றில் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மேலும்  பலமடைந்துள்ளது. அவற்றின் வெளிப்படுத்தல்கள் தற்போதே தெரிகின்றன. அரசியலமைப்பில் இலங்கையின் ஜனநாயகத்தன்மைக்கு அடிப்படையாக சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்த 19 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படைகளை 20 ஆவது திருத்தச்சட்டத்தின் வாயிலாக மாற்றமடையச்செய்யவுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத முனைப்புக்கள் பாரளுமன்றிலும் அதற்கு வெளியிலும் ஆளும் மற்றும் பிரதான எதிர்க்கட்சியிடம் இருந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.
எனினும்; தமிழ்த் தேசிய நிகழ்ச்சி நிரலில் பயணிக்கும் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரட்சியைக்காட்டாதிருப்பது வேதனையானது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த கட்சிகளுள் நாம் பிரதானமானவர்கள் என்ற வகையில்  தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிணை ஓரணிப்படுத்தும் செயற்றிட்டத்தினை சிறப்பாக நடைமுறைப்படுத்த அரசியல், போராட்ட அனுபவம் எமது இயக்கத்திற்குக் காணப்படுகின்றது. அதனை தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வழிநடத்தலில்; பாராளுமன்றிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனா கருணாகரன் அவர்களும் வினோ நோகராதலிங்கம் அவர்களும் சகல தரப்புக்களையும் இணைத்துச் செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம். அர்ப்பணிப்பினை நாம் வெளிப்படுத்த தயாராக இருக்கின்றோம் என ரெலோவின் யாழ் மவாட்டப்பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.