ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுத்தல்…

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் நீதிமன்ற அலுவல்களை முன்னெடுப்பது தொடர்பில் நீதி அமைச்சின் செயலாளர் எம் .எம் .பி.கே.மாயாதுன்னே அவர்களினால் ஊடகங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

கோவிட் 19 நிலைமையில் கீழ் நீதிமன்ற அலுவல்கள் மேற்கொள்ளப்படும் முறை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகள் குறித்து நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் அனைத்து நிதி மன்றங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள பிரதேசங்களுக்கமைவாக திகதி குறிப்பிடப்பட்ட வழக்குகளுக்கு வேறு தினமொன்றை வழங்குவதற்கும் இந்த திகதிகள் தொடர்பில் அதன் நீதிமன்ற வளவில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்துவதற்கும்,தேவையான ஆலோசனைகள் நீதிமன்ற சேவை ஆணைக்குழுவினால் தற்போழுது குறிப்பிட்ட நீதி மன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஊரடங்குச் சட்ட காலம் நிறைவடைந்த பின்னர் சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து சம்பந்தப்பட்ட நிதி மன்ற வளாகத்திற்குள் சென்று தமது வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை அறிந்துகொள்ள முடியும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மேலும் தெரிவித்துக்கொடுக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.