தபால் அலுவல்களை வரையறுத்தல் தொடர்பாக…

மேற்படி விடயம் தொடர்பில் தபால் மா அதிபரினால் அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையை பொருத்தமான வகையில் பிரசுரிப்பதற்காக உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

கோவிட் 19 தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகள் முன்னெடுக்கும் பணிகளை 2020/10/ 17 வரையில் நிறுத்துவதையும் கொழும்பு டி. ஆர்.விஜேவர்தன மாவத்தை தபால் பரிமாறல் வாடிக்கையார் சேவையை 2020/10/17 ஆம் திகதி வரையில் இடை நிறுத்துவதையும் தயவுடன் அறியத்தருகின்றோம்.

மத்திய தபால் பரிமாறல் ஊடாக வர்த்தக தபால் சேவையை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தபால் பொதிகளை தபாலில் சேர்ப்பதற்கு உதவி அத்தியட்சகர் (வர்த்தகம் )தொடர்பு கொண்டு பொருத்தமான நேரத்தை ஒதுக்கி அந்த பணிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது வெகுசன ஊடகத்துறை அமைச்சரினதும் அமைச்சின் செயலாரினதும் உடன்பாட்டின் அடிப்படையில் பெறப்பட்ட தீர்மானம் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது தொடர்பில் வாடிக்கையாளர்களான பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பில் தபால் திணைக்களம் கவலையைத் தெரிவித்து கல்கின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.