வசந்தம் டிவி,மற்றும் ஐரிஎன் பிராந்திய ஊடகவியலாளரை தாக்கிய மூவர் விளக்கமறியலில்…

வசந்தம் டிவி,மற்றும் ஐரிஎன் பிராந்திய ஊடகவியலாளரை தாக்கிய மூவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் பரூஸ் இன்று(12) உத்தரவிட்டார்.
அக்போபுர,சீனிஆலை பகுதியைச் சேர்ந்த 24,28,மற்றும் 20 வயதுடைய  மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம்  அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை(11)  அக்போபுர பகுதியில் விபத்தொன்று ஏற்பட்டதை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை மூன்று சந்தேக நபர்களும்  தாக்கியதோடு  அவரின் ஒலிப்பதிவு கருவியையும் அபகரித்துச் சென்றுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளரினால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய மூவரை கைது செய்து கந்நளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போதே விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.