மட்டக்களப்பு மாவட்டத்துக்கு புதிய அரச அதிபர் நியமனம்…

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அதிபராகக் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றுப் பிற்பகல் அதற்கான அமைச்சர் அவை அலுவலகத்தில் நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

மாவட்ட அரச அதிபராகக் கடமையாற்றிய  திருமதி கலாமதி பத்மராஜா பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.கருணாகரன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவர் என்பதும், இவர் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.