வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் விடுவிப்பு…
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 50 விமான பயணிகள் இன்று (17.10.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 50 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர். இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிரு ந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பணிகளில் 50 விமான பயணிகளுக்கு கொரோனோ தொற்று இல்லாத நிலையில் அவர்களை காலி , பொலநறுவ , மாத்தளை உள்ளிட்ட அவர்களது வதிவிடங்களுக்கு பேரூந்துகளில் இராணுவத்தினரால் அழைத்து சென்று விடப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை