புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது…
திருக்கோணமலை -வட்டவான் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
இக்கைது நேற்றிரவு (16) இடம்பெற்றுள்ளது.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் சுற்றுவதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் கார் மற்றும் கெப் வாகனங்கள் இரண்டையும் சந்தேகநபர்கள் 9 பேரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தோப்பூர்,காலி,அத்துறுகிரிய,நி லாவெளி போன்ற பகுதிகளைச் சேர்ந்த 25 மற்றும் 45 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும்,இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை