தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் திறக்கப்பட்ட வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை…
பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனோ தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்பட்டே வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். அதன் மூலம் சமூகபரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
தொற்றுநீக்கல் செயற்பாட்டிற்காகவே வைத்திசாலை பமூடப்பட்டது பத்து மணிக்கு பின்னர். ஏனைய சிகிச்சை செயற்பாடுகள் வழமைபோல நடைபெற்று வருகின்றது.
தற்பொழுது ஊழியர்கள் பயணிக்கும் மற்றைய வாயில் வழியாக நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
|
|
கருத்துக்களேதுமில்லை