கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம்…

கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார். தீயணைப்பு பிரிவின் பணியாளர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமையும் தற்காலிக பணியாளர்களை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கடமையில் ஈடுபட அனுமதிக்காமையே தீயணைப்பு பிரிவின் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தீயணைப்பு பிரிவின் சேவைகள் அவசியம் தேவைப்படின் குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்  0779515721

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.