வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

வவுனியா வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்திருந்த நபர்களில் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் வேலங்குளம் விமானப்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு நேற்றையதினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இன்று (23.10.2020) மதியம் வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் 24 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்களை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வைத்தியசாலைக்கு இடமாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் கொரியா நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.