வவுனியாவில் இ.போ.சபை பேரூந்து -டிப்பர் மோதி விபத்து: ஒருவர் காயம்…

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக இ.போ.சபை பேரூந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26.10.2020) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற  இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனம் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீதென மோட்டார் சைக்கிள் ஒன்று வவுனியா, நகரசபை வீதியிலிருந்து ஏ9 வீதிக்கு ஏற முற்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் டிப்பர் வாகனம் திடீரென தனது வேகத்தைக் கட்டுப்படுத்தி வாகனத்தை நிறுத்திய போது டிப்பருக்கு பின்பக்கமாக  கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற  இ.போ.ச பேரூந்து டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இ.போ.ச பேரூந்தின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.