பரவிப்பாஞ்சான் சமாதான செயலக வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் சிறீதரன் எம்.பி

பரவிப்பபாஞ்சான் சமாதான செயலக வீதி புனரமைப்பு பணிகளை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்தார். குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 1.5 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தமிழரசுக் கட்சியின் பரவிப்பாஞ்சான் பகுதி அமைப்பாளர் விஸ்வலிங்கம் மற்றும் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.