கொரோனா தொற்று ;வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்….

கொரோனா தொற்று உறுதியானோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, நாளை (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா தொற்று உறுதியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காலகட்டத்தில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு அவர்களுக்கு தொற்று உள்ளதாக என கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனை முடிவு கிடைக்கும் வரை அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.