நியமனகடிதங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டவர்க்ளுக்கான நாடு பூராகவும் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில்  தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனகடிதங்கள் அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினரும் ,வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸ்ஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் அமைச்சரின்  இணைப்பாளர் எம்.வை.எம். நிப்ராஸ் அவர்களினால் நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இணைப்பாளரின் கல்முனை காரியாலயத்தில் இன்று (27)  இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.