மூன்று பிள்ளைகளின் தாயாரை கத்தியால் குத்திய இளைஞருக்கு விளக்கமறியல்.

ஹொரவ்பொத்தானை நகர் பகுதியில் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து மூன்று பிள்ளைகளின் தாயாரை கத்தியால் குத்திய இளைஞரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில்  குறித்த சந்தேகநபரை நேற்று மாலை (27) ஆஜர்படுத்தியபோது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் ஹொரவ்பொத்தான -வெலிமுவப்பொத்தான ,பஹல குபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த டி.டி.லசந்த குமார சிங்க (22வயது) எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் 26ஆம் திகதி பிற்பகல் 12.30 மணியளவில் தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கணவருக்கு முக கவசம் இல்லாதபோது அவர் முற்சக்கர  வண்டிக்குள் இருந்துள்ளார்.
இதைவேளை மூன்று பிள்ளைகளின் தாயார் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த கத்தியால் குத்திய சந்தேகநபரை கைது செய்து விசாரணை செய்தபோது தன்னுடன் திருட்டுத்தனமாக பழகி தன்னை ஏமாற்றியதாகவும் அந்தக் கோபத்தில் கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ்  வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.