பாரதிபுரத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் சட்டவிரோதமாக எல்லையிடப்படும் காணிகள் மக்களின் முறைப்பாட்டை அடுத்து களத்தில் சிறீதரன் எம்.பி !

பாரதிபுரத்தில்  மக்களால் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரத்துடன்  நீண்ட காலமாக வருடாவருடம் வயல் விதைப்பு செய்யப்படுகின்ற வயல்களை சட்டவிரோதமான முறையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் எல்லையிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இன்று குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் சென்று பார்வையிட்டார்.

குறித்த சந்திப்பில் வட்டார பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுமாரன் கட்சியின் அமைப்பாளர்கள் சுபாஸ், யசோதரன் ஞானம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.