அம்பாறையில் பலத்த காற்றுடன் மழை…
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று மாலை திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழைபெய்து கொண்டிருக்கின்றது.
அட்டப்பள்ளம்,நிந்தவூர்,காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு,மற்றும் மணல்சேனை போன்ற பகுதிகளில்காற்றுடன் இடி முழக்கத்துடன் அதிகளவிலான மழைபெய்கின்றது.
இதனால் பயணிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகினர். சில பகுதிகளில் பாரிய மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் வீதிப் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டன.
இதனால் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மழை நீர் தேங்கி வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது.
தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் விழிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மாலை வேளையில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை