திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் மீட்பு…

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பகுதியில் பொலிஸாரினால் சிறிய கைத்துப்பாக்கியொன்று ஐந்து சன்னங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கந்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் இத் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்துப்பாக்கி நேற்று வியாழக்கிழமை (29) மாலையில் கைப்பற்றியதாக கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எச்.டபிள்யு.விஜயசிறி தெரிவித்தர்.
கந்தளாய் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இத் கைத் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
ஈச்சிலம்பற்று பிரதான வீதியிலிருந்து நூறு மீற்றர் தூரத்தில் இத் கைத்துப்பாக்கி காணப்பட்டதாகவும்,அத் துப்பாக்கியினுள் ஐந்து சன்னங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது சீனா நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இத்துப்பாக்கி புதிதாக உள்ளதாகவும்   ஏதாவது குற்றச் செயல்களை மேற்கொண்டு விட்டு வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.